சீமானியமும் மறைந்திருக்கும் பாசிசமும்.
சீமானின் பேச்சில் உண்மைகளை குழி தோண்டி புதைக்கும் உணர்ச்சிகளே மிகுதியாக இருக்கும் சீமான் முதலமைச்சர் எனும் ஒற்றை நாற்காலியில் அனைத்து அதிகாரமும் இருப்பது போலவும் அதை தான் அடைவதொன்றே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் என்று கட்டமைக்கிறார். சீமான், மோடி போன்றவர்களுக்கும் முசோலினி, ஹிட்லருக்கும் பெருமளவு ஒற்றுமை உண்டு. இவர்கள் அனைவரும் உணர்ச்சிகரமாக இன உணர்வையும் வெறுப்புணர்வையும் தூண்டியே அரசியல் செய்தனர். பாசிசத்தில் வெறுப்புணர்ச்சியே அடிப்படை. ஹிட்லருக்கு யூதர்கள், BJP-RSS முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்கின்றனர். சீமானியமும் வந்தேறிகள் என்று ஒரு சாராரை நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக்கி அதன் மூலம் வெறுப்பரசியல் செய்கின்றனர். BJP முகலாய ஆட்சியை அவமானமாக கூறுவது போல நாயக்கர் ஆட்சியை சீமானும் குறை கூறுகின்றார். தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள்,12524 கிராம பஞ்சாயத்து, 561 நகராட்சி, 234 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவற்றில் உள்ள அனைவரும் வந்தேறிகள் அல்ல. இதில் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்புடனே ஊழலும் சுரண்